Sunday, 11 March 2012

நாண்மணிக்கடிகை

கள்ளாமை வேண்டும்  கடிய வருதலால் 
தள்ளாமை  வேண்டும் தகுதி உடையன
நள்ளாமை வேண்டும் சிறியரோடு, யார்மாட்டும் 
கொள்ளாமை  வேண்டும்  பகை

....... விளம்பி நாகனார்

நமக்கு உரிமையில்லாத பிறர்பொருளை எந்தவிதத்திலும் ஏமாற்றி பின்னர் அடைந்து கொள்ளுதல்  பெரும் துன்பத்தை தருமாதலால் அதை களவு செய்து கொள்ளும் எண்ணம் கூடாது.

கடைப்பிடிக்க வேண்டிய நல்ல ஒழுக்கங் களிலிருந்து நாம் 

வழுவாதிருக்க வேண்டும்.

பொருந்தாத குணங்களையுடைய கீழ்நிலை மக்களிடம் நட்பு பாராட்டியிருத்தல் கூடாது.

எந்த வகையினராயினும் அவர்களிடம் பகை பாராட்டுதல் கூடாது.


கோதைதனபாலன் 




 

No comments:

Post a Comment