Saturday, 24 March 2012

நாலடியார்

இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோடு இன்ன- குடிப்பிறந்தார்
குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு
ஒன்றா உணரற்பாற் றன்று


................நாலடியார்........குடிப்பிறப்பு

பெரியோர் வரக்கண்டால் தன் இருக்கையிலிருந்து எழுதலும்,
சற்று எதிர் சென்று மகிழ்வுடன் வரவேற்றலும், மற்ற உபசரிப்புகள் முடித்து
பிரியும்போது சற்றுப் பின் செல்லலும், அவர் விடை தந்த பிறகே திரும்பி
வருதலும் ஆன இகுணங்களை உயர் குடி பிறந்த மக்களே அழியாத ஒழுக்கங்களாக கடைப் பிடிப்பார்.
கீழ் மக்களிடம் இவ்வாறு ஒன்றாவது வழுவாது போற்றப்பெறும் என்று சொல்வதற்கில்லை
 
   · ·

No comments:

Post a Comment