Wednesday, 20 June 2012

குறுந்தொகைப் பாடல்;

இயற்கைபொருள்களில் தெய்வத்தின் தன்மையைக் கண்டு 
உருகிப் பாடும் முறையும் பரிபாடல் தவிர மற்ற பழைய பாடல்களில் இல்லை.
ஆனால் காதல், கொடை,வீரம் இவற்றைப் பாடும் பொழுது இயற்கையை 
அரவணைத்தே அழகாகப் பாடப் பட்டுள்ளன. பிற்காலத்தில் வடமொழியின் 
மொழி பெயர்ப்பும்,தழுவலும் அமையும் காலம் வரை அகத்திணை,புறத்திணை மரபுகள் 
தமிழ் இலக்கியத்தில் செல்வாக்கு பெற்றிருந்தன.

அகத்திணை மரபு ஆழமாக வேறுன்றிய தன்மை
விளக்கும் ஒரு குறுந்தொகைப் பாடல்;


'வேரல் வேலி வேர்க்கோன் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அஃது அறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூக்கியாங்கு இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே .'

காதலனும் காதலியும் அன்பு கொண்டு களவொழுக்கத்துடன்
திருமணம் கொள்ளாமல் வாழும் நிலையில்
தோழி தன் தலைவியின் நன்மைக்காக
அவள் காதலனிடம் அறிவுறுத்தும் பாடல்.
'மூங்கில் வேலியாக வளர்ந்துள்ள ,
வேரில் கைக்கும் பலாமரங்களையுடைய
நாட்டிற் கு உரியவனே! ,தக்கவனாக ,
தக்க வகையில் நடந்து கொள். யார் அதை அறிவார் ?
மலைச் சாரலில் சிறிய கிளையில் பெரிய பலாப்பழம்
தொங்குவது போல் ,இவளது உயிர் சிறியதாயிருக்க ,
உன் மீது கொண்ட காதல் பெரிதாய் உள்ளது.
'திருமணம் செய்து கொள்ளமால் களவொழுக்கத்தில்
வாழும் காதல் வாழ்க்கை சுமையானது , தாங்கமுடியாதது'
என்று இயற்கை குறிப்பால்அவனுக்கு உணர்த்தப் படுகிறது.

மு.வரதராசன். தமிழ் இலக்கிய வரலாறு
சாகித்திய அக்காடமி

No comments:

Post a Comment