புறநானூற்றுச் செய்தி.
நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி எனும் இரு சகோதர சோழ மன்னர்கள் தன் அகந்தை தலைக்கேறி ஒருவருக்கொருவர் போரிடுகின்றனர். இங்கு நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி கோட்டையை முற்றுகையிடுகிறான்.நெடுங்கிள்ள ியோ போரிலும் பொருதாது, கோட்டை வாசலையும் திறக்காது அடைத்து வைத்திருக்கும் நிலையை புலவர் கோவூர் கிழார் அவனிடம் இடித்துரைக்கும் பாங்கு.
இரும்பிடித் தொழுதியோடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து
அலமரல் யானை உருமென முழங்கவும்
பாலில் குழவி அலறவும்,மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉ்க் கேட்பவும்,
இன்னாது அம்ம,ஈங்கு இனிது இருத்தல் ;
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல் !
'அறவை யாயின், 'நினது ' எனத் திறத்தல் ;
மறவை யாயின் போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லை யாகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே .
'பசி மிகுந்த யானைகள் உணவு பெறாது ,கட்டிய கம்பம் வருந்தச் சாய்ந்து,நிலத்திற் புரண்டு ,இடியேறு போலப் பிளிர்கின்றன. பால் இல்லாதவாய் ,,குழந்தைகள் அழுகின்றன.மகளிர் பூவில்லாது வெறுந்தலையை முடிக்கின்றனர். நல்ல வீட்டிலும் குடிநீர் இன்றி வருந்தி மக்கள் கதறுகின்றனர்.இவையெல்லாம் கேட்டும் நாணங் கொள்ளாது இனிதாக இங்கு நீ இருப்பது மிகவும் தவறானது.நெருங்க முடியாத ஆற்றல் மிகுந்த குதிரைகளை உடைய தலைவனே! நீ
அறத்தை உடையவனாயின்,'இது நின் கோட்டையும் தானே , என்று கூறித் திறந்து விட்டு விடு. அன்றி வீரம் உடையவன் என்றால் ,போர் செய்வதற்காக கதவைத் திறந்து ,எதிர்த்துச் செல் . இரண்டுமே செய்யாது ,மதிற் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே ஒளிந்திருத்தல் வெட்கக்கேடு ஆகும்.
நெடுங்கிள்ளியிடம் சென்ற பிறகு நலங்கிள்ளியைக் காணச் செல்கிறார். அங்கு அவனிடம் அவன் குணம் பொறுத்து எடுத்துரைக்கும் பாங்கு இவ்வண்ணம் செல்கிறது..
இரும்பனை வெண் தோடு மலைந்தோ அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியம் ஆர்மிடைந் தன்டூர்; நின்னோடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே ;
ஒருவீர் தோற்பினும் , தோற்பது குடியே இருவீர் வேறல் இயற்கையும் அன்றே ; அதனால்
குடிப் பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!
நின்னை எதிர்த்து நிற்பவன் பணம்பூச் சூடிய சேரன் அல்லன்;
வேப்பந்தார் அணிந்த பாண்டியனும் அல்லன்;
நின் கண்ணியும் ,நயனுடன் போரிடுவோன் கண்ணியும் ஆத்திப் பூவால் ஆயினவே! ஆகவே ,ஒருவர் தோற்றாலும் தோற்பது நும் சோழர் குடி அல்லவோ ! இருவரும் வெற்றி பெறுவது என்பது இயல்பன்றே. அதனால் நும் செயல் குடிப்பெருமைக்குத் தக்கதன்று. நும் போன்ற வேந்தர்க்கு உடல் பூரிக்கும் அளவு நகையுண்டாக்குவதே நீவீர் இயற்றும் போராகும்.
( ஈண்டு இருவரையும் புலவர் இடித்துரைக்கும் பாங்கு நயம் வியந்து போற்றத் தக்கது .)
நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி எனும் இரு சகோதர சோழ மன்னர்கள் தன் அகந்தை தலைக்கேறி ஒருவருக்கொருவர் போரிடுகின்றனர். இங்கு நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி கோட்டையை முற்றுகையிடுகிறான்.நெடுங்கிள்ள
இரும்பிடித் தொழுதியோடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து
அலமரல் யானை உருமென முழங்கவும்
பாலில் குழவி அலறவும்,மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉ்க் கேட்பவும்,
இன்னாது அம்ம,ஈங்கு இனிது இருத்தல் ;
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல் !
'அறவை யாயின், 'நினது ' எனத் திறத்தல் ;
மறவை யாயின் போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லை யாகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே .
'பசி மிகுந்த யானைகள் உணவு பெறாது ,கட்டிய கம்பம் வருந்தச் சாய்ந்து,நிலத்திற் புரண்டு ,இடியேறு போலப் பிளிர்கின்றன. பால் இல்லாதவாய் ,,குழந்தைகள் அழுகின்றன.மகளிர் பூவில்லாது வெறுந்தலையை முடிக்கின்றனர். நல்ல வீட்டிலும் குடிநீர் இன்றி வருந்தி மக்கள் கதறுகின்றனர்.இவையெல்லாம் கேட்டும் நாணங் கொள்ளாது இனிதாக இங்கு நீ இருப்பது மிகவும் தவறானது.நெருங்க முடியாத ஆற்றல் மிகுந்த குதிரைகளை உடைய தலைவனே! நீ
அறத்தை உடையவனாயின்,'இது நின் கோட்டையும் தானே , என்று கூறித் திறந்து விட்டு விடு. அன்றி வீரம் உடையவன் என்றால் ,போர் செய்வதற்காக கதவைத் திறந்து ,எதிர்த்துச் செல் . இரண்டுமே செய்யாது ,மதிற் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே ஒளிந்திருத்தல் வெட்கக்கேடு ஆகும்.
நெடுங்கிள்ளியிடம் சென்ற பிறகு நலங்கிள்ளியைக் காணச் செல்கிறார். அங்கு அவனிடம் அவன் குணம் பொறுத்து எடுத்துரைக்கும் பாங்கு இவ்வண்ணம் செல்கிறது..
இரும்பனை வெண் தோடு மலைந்தோ அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியம் ஆர்மிடைந் தன்டூர்; நின்னோடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே ;
ஒருவீர் தோற்பினும் , தோற்பது குடியே இருவீர் வேறல் இயற்கையும் அன்றே ; அதனால்
குடிப் பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!
நின்னை எதிர்த்து நிற்பவன் பணம்பூச் சூடிய சேரன் அல்லன்;
வேப்பந்தார் அணிந்த பாண்டியனும் அல்லன்;
நின் கண்ணியும் ,நயனுடன் போரிடுவோன் கண்ணியும் ஆத்திப் பூவால் ஆயினவே! ஆகவே ,ஒருவர் தோற்றாலும் தோற்பது நும் சோழர் குடி அல்லவோ ! இருவரும் வெற்றி பெறுவது என்பது இயல்பன்றே. அதனால் நும் செயல் குடிப்பெருமைக்குத் தக்கதன்று. நும் போன்ற வேந்தர்க்கு உடல் பூரிக்கும் அளவு நகையுண்டாக்குவதே நீவீர் இயற்றும் போராகும்.
( ஈண்டு இருவரையும் புலவர் இடித்துரைக்கும் பாங்கு நயம் வியந்து போற்றத் தக்கது .)
No comments:
Post a Comment