Wednesday, 9 May 2012

நான்மணிக்கடிகை

பழிஇன்மை மக்களால் காண்க ; ஒருவன்
கெழிஇன்மை கேட்டால் அறிக ;பொருளின்
நிகழ்ச்சியால் ஆக்கம் அறிக ;புகழ்ச்சியால்
போற்றாதார்ப் போற்றப் படும்.

.........நான்மணிக்கடிகை
ஒருவன் தான் பழிக்கப் படுவது இல்லாமையைத் தன் மக்கட்பேற்றால்
அறிந்து கொள்ளலாம் ; தனக்கு நட்பு அல்லாமையை தனக்குப் பொருள்
அழிவு நேரும்போது புரிந்து கொள்ளலாம் ; ஒருவனுடைய வளர்ச்சியை
அவனிடம் பொருள் சேரும் முறையுணர்ந்து தெரிந்து கொள்ளலாம் . பலரும் ஒருவனைப்
புகழும் புகழ்ச்சி அவன் பகைவரையும் அவனை விரும்ப வைக்கும்.

No comments:

Post a Comment