Exchange of our views in any field will provide good ground for our good thinkings and thereto choose a righteous path for us.
Sunday, 16 October 2011
Open Window: உள்ளாட்சி தேர்தல்
Open Window: உள்ளாட்சி தேர்தல்: நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் ஒரு சிந்தனை ஓட்டம். நிற்கும் வேட்பாளர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர்,கெட்டிக்காரர்,...
உள்ளாட்சி தேர்தல்
நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் ஒரு சிந்தனை ஓட்டம். நிற்கும் வேட்பாளர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர்,கெட்டிக்காரர், தைரியசாலி ,அனுபவமிக்கவர் என்றெல்லாம் வரையறுத்து சொல்ல முடியாது .தெரியாத நபர்களுக்கு கட்சி ரீதியாக பெரும்பான்மையும் ,அது அல்லாதவர் தனது செல்வாக்கு பொறுத்துமே விழும் என்பது மறுக்க முடியாத உண்மை.எதை எப்படி யோசித்து பார்த்தாலும் ,பணம் சம்பாதிக்க துடிக்கும் வேட்பாளர்களே அதிகமாக உள்ளதால், தனது ஊரை யார் நேசிக்கிறார்கள்,இதுநாள் வரை அவர்களின் செயல்பாடு அவர்கள் ஊரில் எந்த அளவில் உள்ளது என்று நாம் ஓரளவேனும் கிரகித்து அது சார்ந்து ஓட்டளிப்பது இந்த உள்ளாட்சி தேர்தலில் நன்மை பயக்கும் என்று நம்ப இடம் உள்ளது.பஞ்சாயத்துகளில் கண்டிப்பாக இதை கடைப்பிடிக்க வேண்டும்.காரணம் மாநில அரசு தாண்டி செயல்படும் அதிகாரம் உள்ளது என்பதை பெரும்பான்மையோர் அறியாதிருப்பது கவலைக்குரிய விஷயமே.
கோதைதனபாலன்.
Subscribe to:
Posts (Atom)