Exchange of our views in any field will provide good ground for our good thinkings and thereto choose a righteous path for us.
Friday, 3 January 2014
கையளவேதான் இதயம் வைத்தான் ; கடல்போல் அதிலே ஆசை வைத்தான்...
மெய்யும் பொய்யும் கலந்து வைத்தான்.... அவன் இறைவன்.
நினைவலைகள் மனதுக்கு இதமாகும்போது , நிகழ்வலைகள் மனம் கவர்வதில்லை.
நிகழ்வலைகள் மனதில் தடுமாறும்போது வரும் அலைகள் பிரமிப்பாகின்றன.
கோதை தனபாலன்.போடா போடா. பைத்தியமே ! உன் புத்திக்கு வேண்டும் வைத்தியமே , வைத்தியமே.
அனுபவத்தில் வந்த பாடம், மனதில் கொண்ட வலி (வேதனை ) நம் பாதையை தீர்மானிக்கிறது... அது விதி வழி செல்கிறது. வாழும்வரை போராடு... நம் புத்தி நம் கையில்.
கோதை தனபாலன்
சிந்தனை செதுக்கல்
நாம் வாழ்வில் எப்போதும் பிடித்தாற்போல் பேசுபவரையே நாடிச் செல்கிறோம் . அவர்கள் வாசமில்லா அழகு காட்டு மலர்கள்.
நம்மை சுற்றி நிச்சயம் அக்கறையும் அன்பும் கொண்டவர் இந்தப் பேச்சிற்கு உடன்படார். இவர்கள் அன்றலர்ந்து மடியும் சின்ன மலர்கள் என்றாலும் வீசும் வாச மலர்கள்.
அந்த மணம் நுகரும் அருமை தெரிந்தால் நாம் அதி புத்திசாலிகளே. எது எப்படியாயினும் இரு வகை மலர்களுக்குளேயே நம் வாழ்வின் மகிழ்வு அடங்கியுள்ளது. வாழ்வோம் , ரசிப்போம். ரசனை இல்லாத வாழ்வில் சுவை இல்லை. ஈர்ப்பு இல்லாத மனதில் ரசனை இல்லை.
கோதைதனபாலன்
Subscribe to:
Posts (Atom)

