Thursday, 1 March 2012

திரிகடுகம்

பழமையை நோக்கி அளித்தல், கிழமையால்
கேளிர் உவப்பத் தழுவுதல்- கேளிராய்த்
துன்னிய சொல்லால் இனந்திரட்டல் இமமூன்றும்
மன்னர்க்கு இளையான் தொழில்


......நல்லாதனார்


நெடுங்கால நட்பை பாராட்டி
  நண்பர்களை  போற்றி வருதலும்,
தன சுற்றத்தினரிடம் உரிமை
பாராட்டி உறவு போற்றி வருதலும்,
இனிமையான சொற்களால் மேன்மைமிகு சான்றோர்களின் உறவை வளர்த்துக் கொள்ளுதலும் ஆகிய இம்மூன்றும் இளைய தலை முறையினரான வாலிப வயதினர் மேற்கொள்ளக் கூடிய செயல்களாகும்.

கோதைதனபாலன்

No comments:

Post a Comment