Wednesday, 14 March 2012

நாலடியார்

நாலடியார்


அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால- நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்ததூ லார்.

அவமதிப்பாயினும்,பாராட்டுரையாயினும் இரண்டையும்
ஓன்றே போல் பாவிப்பர் பெரியோர். ஒழுக்கம் இல்லா
கீழ்மக்களது பழிப்புரையு்ம் சரி, பாராட்டுரையும் சரி,
...
-பெரியோர் மதிக்கமாட்டார்கள். சான்றோர்கள் ஏற்புடைய
காரியம் செயின் உள்ளம் மகிழ்வர் அன்றி பொருந்தாத
காரியம் செயின் மதியாது வி்ட்டுவிடுவர். எனவே பெரியோரை
சிறியோர் மதித்து நடந்து கொள்ளுதல் சாலவும் நன்று

 கோதைதனபாலன்

No comments:

Post a Comment