Tuesday, 7 May 2013

நல்லோர் ஊக்கம்..




நீ படு அது உன் கர்மவினை - இதை
 

நான் சொல்ல மாட்டேன் 
நீ எழு ! சிலிர்ப்பு உன் எண்ணங்களிலே..
 

இதைச் சொல்வேன்
 
ஆறுதல் மொழிகள் .. அவற்றில்

மனம் சமநிலை அடையலாம்

அப்படியே விட்டால் வீழுமே உன் நிலை

நல்லோர் ஊக்கம் ..அங்கே

சமைத்திடுமே புது எழுச்சியை !


நாளும் சொல்வேன் நான் உனக்கு

எனக்குச் சொன்னவர் வழி நின்று.


...கோதை தனபாலன் 

No comments:

Post a Comment