நீ படு அது உன் கர்மவினை - இதை
நான் சொல்ல மாட்டேன்
நீ எழு ! சிலிர்ப்பு உன் எண்ணங்களிலே..
இதைச் சொல்வேன்
ஆறுதல் மொழிகள் .. அவற்றில்
மனம் சமநிலை அடையலாம்
அப்படியே விட்டால் வீழுமே உன் நிலை
நல்லோர் ஊக்கம் ..அங்கே
சமைத்திடுமே புது எழுச்சியை !
நாளும் சொல்வேன் நான் உனக்கு
எனக்குச் சொன்னவர் வழி நின்று.
...கோதை தனபாலன்
No comments:
Post a Comment