தனிமைச்சிறை கரையேறுமா..!
by Kothai Dhanabalan (Notes) on Monday, May 6, 2013 at 3:24pm
மழலைப் பருவத்தில் விடுதியில்
பெற்றவர்தாம் விடதன் ஒத்தநண்பர் மத்தியில் தனிமை இல்லை.
பிரிவின் தாக்கம் தான்என்ற ஆக்கம் ஆனது.
பிஞ்சுமனத்தில் துணிச்சல், விளைச்சலானது.
மாணவப் பருவம் எட்டியது
எண்ணச் செறிவுகள் அடர்ந்தது
விரிந்த ஞானம் களையெடுத்தது
துணை என்றதும் ஏககரம் கிட்டியது
நட்புகளின் பாதையில் மனம் திளைத்தது.
காயா, பழமா என்றார்... வீணே
காய் என்றேன்.. ..ஒதுங்கினர் அவர்
விளையாட்டாய் ஒருநாள் தனிமைச் சிறை
ஐயகோ! அது கொடுமை.! மீண்டும்
பழம் என்றேன். நேசக்கரங்கள் நீண்டு வந்தன.
வயதில் வாழ்க்கைப் பாடம்
அங்கே புது உலகம்
கடமைப் பாதைகள் கட்டுப்பாடுகளில்
அன்றலர்ந்த பூவாய் அதன் முடிவாய்
அவ்வப்போது முகிழ்க்கும் நட்புமொட்டுக்கள்
சுகந்தம் தந்தது , இனிமையானது நோய் எனும் சாக்காடும் சேர்ந்தது
தனிமை தழுவியது.. ஆரத் தழுவியது
ஆனால் சிந்தை விரிந்தது
தேர்ந்த பக்குவம் கைகொடுத்தது
நூல்கள் நட்பாயின, வண்ணம் தீட்டுதல்
தந்தது. மகிழ்வே. இசைகேட்க தடையேதுமில்லை
உயிரில் உயிராய் இசை கலந்தது
தெய்வத்தின் அருள் சேவையானது
மறுமலர்ச்சி வாழ்வில் வந்தது .
புதுப்புது கடமைகள் ஈடேறின அந்தோ..!
மறுபடியும் தனிமைச் சிறை..
உறவுகள் கடமைகளாக, பகிர்வுகள் இனி யாரிடம்?
வாழ்வின் எல்லையில், வாழ்ந்திடும் தீர்க்கம்
எதுவரை எப்படித்தான் யாரறிவார் ! இதுவரை
வாராது வந்த மாமுனி போல்
பாராது வந்த நட்பு .. அதுகிளறிய
பழைய நேசஉணர்வுகள்.. இனிஅங்கே
வெறுமை இல்லை, பகிருமிடம் ஆனது ! தனிமைச்சிறை கரையேறும் படலமானதே!
...... கோதைதனபாலன்

No comments:
Post a Comment