Friday, 3 January 2014



வாழ்வுக்கு பணம் ஆதாரம் ; பசிக்கு உணவு ஆதாரம்;
உயிருக்கு உடல் ஆதாரம் ; மனதுக்கு நிறைவு ஆதாரம் ;
வாழ்க்கைக்கு நெறிபிறழாமை ஆதாரம் ; நிலையென 
எண்ண அவன்அன்றி எதுஆதாரம் .


கோதை தனபாலன்.






பயன் யாதென வாளாவிருக்குமோ மனம் 
பயன் இல்லையென எதுவும் உண்டோ 
பயன் உயிருக்கு உடல் உள்ளவரை
பயன் படாதபக்தியும் புத்தியும் உண்டோ

                            கோதை தனபாலன்.


No comments:

Post a Comment