Wednesday, 29 February 2012

திரிகடுகம்

தன்னை வியந்து தருக்கலும்,  தாழ்வின்றீக்
கொன்னே வெகுளி  பெருக்கலும் -  முன்னிய
பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றுஞ்
செல்வம் உடைக்கும் படை.


............நல்லாதனார்


தன் பெருமையை தானே வியந்து,புகழ்ந்து பேசித்திரிபவன் , 
தன் கோபங்களை அடக்கி வாசிக்காது வெளிக்காட்டி  திரிபவன் ,
எந்தப்பொருள் எத்தகையதாயினும் விருப்பமிகுதியால் தானேஅடைந்துஅனுபவிக்க விழைபவன் ஆக இவர்கள் இந்த தங்களது மூன்று  செயல்பாடுகளினாலேயே  தங்கள்  செல்வத்தை அழித்துக் கொள்வர். 




கோதைதனபாலன் .

No comments:

Post a Comment