Monday, 27 February 2012

திரிகடுகம்

திரிகடுகம்


நன்றிப்     பயன்தூக்கா  நாணிலியும், சான்றோர்முன் 
மன்றில் கொடும்பா  உரைப்பானும் ,-நன்றின்றி
வைத்த அடைக்கலம் கொள்வானும் இம்மூவர்
எச்சம் இழந்துவாழ் வார்.



.......நல்லாதனார்



ஒருவர் செய்த உதவியை நினைத்து பார்க்காதவனும்,
பெரியோர் இருக்கும் சபையில் மதியாது கடும்சொற்கள் சொல்பவனும்,

தன்னிடம் பாதுகாக்க தரப்பட்ட பொருள் மீது ஆசை கொண்டு கைப்பற்றி இருப்பவனும் 
தாங்கள் அடைந்திருந்த புகழ் அனைத்தையும் 
இழப்பவராவர்.




கோதைதனபாலன்.


No comments:

Post a Comment