திரிகடுகம்
அன்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலில் கைவிடுதல்
நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்
குற்றம் தரூஉம் பகை.
...
.........நல்லாதனார்
எல்லோரையும் பிணைத்திருக்கும் அன்பு என்ற கட்டிலிருந்து ஒருவன் விலகியிருப்பதும்,
வாழ்க்கையில் கற்றறியும் கல்வியை ஒருவன் பொருள் மேல் உள்ள ஆசையால் கற்காது விடுதலும்,
நட்பு தரும் அரிய பண்பினை மதியாது ஒதுக்குதலும்
ஆகிய இந்த மூன்று நிலைகளே அவனுக்கு பகைமைகளை எளிதில் சேர்க்கும்.
கோதைதனபாலன்

No comments:
Post a Comment