Friday, 29 June 2012

கவிஞர் பாரதிதாசன்

கவிஞர் பாரதிதாசன் மூடத்தனத்தை ,நீக்கி நல்ல சமுதாயம் காணத் துடிக்கும் உணர்வை ஒரு பெண் குழந்தைக்கான தாலாட்டில் புலப்படுத்துவது. 

'மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற 
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே 

வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத் 
தூண்டா விளக்கைத் துலங்கும் பெருமாட்டி!'

ஆண் குழந்தைக்கான தாலாட்டு.

'வாடப் பலபுரிந்து வாழ்வை விழலாக்கும்
மூடப் பழக்கத்தைத் தீது என்றால் முட்டவரும்
மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த
ஈடற்ற தோளா !இளந்தோளா! கண்ணுறங்கு.'

No comments:

Post a Comment