Wednesday, 11 April 2012

நாலடியார்

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைத்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று
.

...........நாலடியார்

அருவிகள் மாலையானது போன்று அமையப் பெற்ற குளிர்ந்த மலைகளையுடையவனே ! அறிவில்லாதவனோடு எதையும் சொல்ல வேண்டாம். அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டு பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையினின்று தப்பித்து நீங்குதல் நன்று.

No comments:

Post a Comment